பிரிட்டிஷ்காரன் தொடங்கி வைத்த ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ இன்னும் வெவ்வேறு வழியாகத் தொடர்ந்து தொடர்ந்து’நல்லிணக்கம்’ குலைக்கும் வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறது. ஆனால் இவ்வஞ்சகத்தைப் புரிந்துகொண்ட இந்துவும் இஸ்லாமியனும் தங்களின் ஆத்மார்த்தமான பிணைப்பினால் அதை முறியடித்து வருகிறார்கள்.
இஸ்லாம் சமூகம் குறித்து சகோதர சமயம் சார்ந்த எழுத்தாளர்கள் என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என ஆராய முற்பட்டேன். அவ்வாறான கதைகளை சேகரித்தேன். பாரதி முதல் பல நவீன எழுத்தாளர்களும் இப்பட்டியலுக்குள் வந்து சேர்ந்தார்கள். வழக்கம் போல வணிக எழுத்தாளர்களைக் கணக்கில் கொள்ளவில்லை.
இது முதல் முயற்சி. வேறு எந்த எழுத்தாளரும் மேற்க்கொள்ளாத முயற்சி.இதன் காரணமாகவே இத்தொகுப்பு முக்கியத்துவம் பெருகிறது.
Author: Keeranur Zakir Raja
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days